சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவுக்கு எதிராக, தமிழக உயர்கல்வி துறைக்கு சிலர் கடிதங்கள் அனுப்பினர்.
அந்த கடிதங்களில் உள்ள புகார்களின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆணையம், நவ., 3௦ முதல் விசாரணை நடவடிக்கையை துவங்கியுள்ளது. இந்நிலையில், துணைவேந்தர் சுரப்பாவின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை, நேரில் தாக்கல் செய்யுமாறு, அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அதன்படி, பல்கலையின் பதிவாளர், இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE