விருத்தாசலம் : ஊழியர்களுடன், தாசில்தாரும் நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்று வழங்கினார்.
'புரெவி' புயல் காரணமாக, பெய்த தொடர் மழைக்கு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமம், மழை நீரால் சூழ்ந்து தனி தீவானது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், கிராம மக்கள் சிரமமடைந்தனர்.இதையடுத்து, சப் - கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்தன. மழை நீரால் சூழ்ந்த உச்சிமேடு கிராமத்தில், தரைப்பாலத்தின் ஒருமுனையில் இருந்து மற்றொரு முனைக்கு, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களை, சக ஊழியர்களுடன் இணைந்து, தாசில்தார் சிவகுமார் தலையில் சுமந்து சென்றார். இது தொடர்பான காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி பாராட்டை பெற்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE