ராமேஸ்வரம் : புரெவி புயலில் சேதமடைந்த ராமேஸ்வரம் விசைப்படகிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் சங்க நிர்வாகிகள்கூட்டத்தில், புரெவி புயலால் ராமேஸ்வரம் விசைப்படகுகளை பாதுகாக்க அரசு அறிவுரைப்படி, பாம்பன் குந்துகால் கடற்கரையில் 116 படகுகளை நிறுத்தினோம்.ஆனால் டிச.,3ல் வீசிய சூறாவளியில் 40க்கும் மேலான படகுகள் ஒன்றுடன் ஒன்றாக மோதி சேதமடைந்தது. இதில் சர்புதீன் என்பவரது படகு கடலில் மூழ்கி மீட்க முடியாத நிலை உள்ளது.மேலும் படகுகளை பாம்பன் நிறுத்தி, மீண்டும் ராமேஸ்வரம் கொண்டுவர 200 லிட்டர் டீசல் செலவானது.
இந்த செலவையும், சேதமடைந்த படகிற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும். புரெவி புயலில் சிறப்பாக செயல்பட்டு உயிர், பொருள்கள் சேதமின்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி' என தீர்மானத்தில் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE