ராமநாதபுரம் : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள இந்தியன் வங்கி முன்பு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., சார்பில் முற்றுகைப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் ராமநாதபுரம் தாலுகா செயலாளர் செல்வராஜ், இந்திய கம்யூ., நிர்வாகி சண்முகராஜன் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு கண்ணகி, மின்வாரிய சி.ஐ.டி.யு., நிர்வாகி குருவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.* மாலையில் சி.ஐ.டி.யு., அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அய்யாத்துரை விளக்கி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE