திருவாடானை : திருவாடானை தாலுகாவில் புரெவி புயலால் பலத்த மழை பெய்ததால் கிராமங்களில் சாலை, கால்வாய்கள் சேதம்அடைந்தன.
முக்கிய தெருக்களில் தண்ணீர் தேங்கியதால் குடியிருப்போர் பாதிக்கப்பட்டனர். சில ஊராட்சிகளில் மோட்டார் மற்றும் மணல்அள்ளும் இயந்திரம் மூலம் தண்ணீரை அகற்றும்பணிகள் நடந்தது.ஆனால் அனைத்து ஊராட்சிகளிலும் போதுமான நிதி இல்லாததால் சாலை, கால்வாய்களை சீரமைக்க முடியாமல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:மாநில நிதிக்குழு மானியம் மற்றும் 15வது நிதி குழு திட்டங்களில்இருந்து கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக நிதி ஒதுக்கவில்லை.இதனால் கிராமங்களில் அடிப்படை வசதிகளை செய்ய முடியவில்லை. தற்போது மழை பெய்த மழையால் பாதிப்பு அதிகமாகியுள்ளது. பணிகளை செய்யமுடியாமல் திணறுகிறோம். நிதி ஒதுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE