மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள விளாக்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்படும்நிலை உள்ளதால்கலுங்கு பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிராமத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விளாக்குளத்தில் ஊரை ஒட்டி கண்மாய் உள்ளது,இந்த கண்மாய் மூலம் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.மானாமதுரை பகுதியில் பெய்த மழை காரணமாக இந்த கண்மாய் நிரம்பி தற்போது ஊரை ஒட்டியுள்ள பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. கண்மாய்க்கு தண்ணீர் வரத்துதொடர்ந்து உள்ளது.
உடைந்ததடுப்பு சுவர் பகுதியில்மண் மூடைகள் அடுக்கப்பட்டுள்ளது. கலுங்கு வழியாக தண்ணீரை வெளியேற்றும் பணியில்அதிகாரிகள், கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.மானாமதுரை விளாக்குளம் கண்மாயில் உடைப்பு மணல் மூடைகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE