கருமத்தம்பட்டி:கருமத்தம்பட்டியில் நுாலகம் திறக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி சாலை விரிவாக்கத்தின் போது, கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வந்த கிளை நுாலக கட்டடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த, 10 ஆண்டுகளாக வேட்டைக்காரன் குட்டை பகுதியில் வாடகை கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தொலைவில் இருந்ததால், அன்றாடம் நுாலகத்துக்கு செல்லும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்தது. கருமத்தம்பட்டியில் நுாலகம் கட்ட எழுந்த கோரிக்கையை அடுத்து, ரூ.44 லட்சம் மதிப்பில், புனித மரியன்னை பள்ளி அருகில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.நேற்று முன்தினம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்த விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, நுாலகத்தை திறந்து வைத்தார். டி.ஆர்.ஓ., ராமதுரை முருகன், ஆர்.டி.ஓ., தனலிங்கம், தாசில்தார் மீனாகுமாரி, மாவட்ட நுாலக அலுவலர் சக்திவேல், ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு, பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE