வால்பாறை:வால்பாறை அடுத்துள்ளது முருகாளி எஸ்டேட். எஸ்டேட்டில் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர், வனிதா, 30. இவர் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மருத்துவமனையில் நோயாளியை பார்த்து விட்டு, வீடு திரும்பினார். அப்போது செடிக்குள் பதுங்கிய சிறுத்தையை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.இதே போன்று, வால்பாறை நகர் நகைக்கடை வீதியில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 'விசிட்' செய்த சிறுத்தை, அங்குள்ள நாயை கவ்வி சென்றது. இந்நிலையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறை நகரில் உள்ள இறைச்சிக்கடைகளில், கழிவுகளை திறந்த வெளியில் வீசுவதால் தான், சிறுத்தை இந்தப்பகுதிக்குள் நுழைகிறது. மேலும், வீடுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான நாய், கோழி, ஆடு போன்றவைகளை வளர்ப்பதால், சிறுத்தை அடிக்கடி வருகிறது.இது குறித்து, வனத்துறை சார்பில் பல முறை விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE