ஜம்மு : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வழி தவறி, இந்திய எல்லைக்குள் நுழைந்த இரு சகோதரிகளும், நேற்று பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கஹூதா பகுதியை சேர்ந்த லைபா ஜபாயர், 17, சனா ஜபாயர், 13, என்ற இரு சகோதரிகள், நேற்று முன்தினம், வழி தவறி, இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பூஞ்ச் மாவட்டத்தில், அந்த இரண்டு மைனர் சிறுமியரையும், பாதுகாப்புப் படையினர், தடுப்பு காவலில் வைத்தனர்.இந்நிலையில், அந்த இரண்டு சிறுமியரும், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு, நேற்று, பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து, மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இரண்டு சிறுமியரும், 'சாக்கன் தா பாக்' எல்லைப் பகுதி வழியாக, இன்று, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.மக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில், அந்த சகோதரிகள், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த இரு சிறுமியருக்கும், பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி, ராணுவ வீரர்கள் வழியனுப்பி வைத்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE