குன்னுார்:குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதில், வண்டி சோலையில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை பயன்படுத்தப்பட உள்ள, வண்ண, குப்பை தொட்டிகளை கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா திறந்துவைத்தார். முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, தன்னார்வ குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தொடர்ந்து, உபதலையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 'கொரோனா நோய் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள்,' என, 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 15 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து ,27 ஆயிரத்து, 681 ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் 'கிண்டர் டிரஸ்ட்' சார்பில், தையல் பயிற்சி பெற்ற, 15 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE