கூடலுார்:மசினகுடி அருகே, இறந்த மானின் இறைச்சியை எடுத்து சென்று சமைத்து உட்கொண்ட, இருவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.முதுமலை, மசினகுடி அருகே, கடந்த மாதம் செந்நாய்களை விஷம் வைத்து கொன்றது தொடர்பாக, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மசினகுடி பொக்காபுரம் பகுதியை சேர்ந்த சிவன், 47, ரமேஷ், 36, மாதேவன், 41, ஆகியோர் செந்நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றது தெரியவந்து. அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.அவர்களிடம், மேற்கொண்ட விசாரணையில், அந்த செந்நாய்கள் வேட்டையாடி விட்டு சென்ற மானின் இறைச்சியை பொக்காபுரம் பகுதியை சேர்ந்த மோகன், 35, கொம்பன், 38, ஆகியோர் எடுத்துச் சென்று, சமைத்து உட்கொண்டது தெரியவந்தது. இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, தலா, 15 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE