கிணத்துக்கடவு:கோவை அருகே, அண்ணன் மகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அடுத்துள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார், 29. இவர், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது தந்தையின் சகோதரர் கிருஷ்ணகுமார், 36. இவர் டிரைவராக பணிபுரிகிறார்.இந்நிலையில், சித்தப்பா கிருஷ்ணகுமார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக கூறி, நந்தகுமார் கண்டித்துள்ளார். இதில், ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், நந்தகுமாரை அரிவாளால் வெட்டினார்.இதில் காயமடைந்த நந்தகுமார், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். கிணத்துக்கடவு இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை நேற்று கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE