குன்னுார்:'ஊட்டி மலை ரயில் தனியாருக்கு வழங்கப்படவில்லை; விரைவில் பயணியர் ரயில் இயக்கப்படும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.நீலகிரி மலை ரயில் வாரந்தோறும் சனி, ஞாயிறு நாட்களில், 'டி.என்.43' என்ற பெயரில், தனியார் சார்பில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இந்நிலையில், 'மலை ரயில் இயக்கம் முழுவதும் தனியார் வசமாகியுள்ளது. டிக்கெட் விலை, 3,000 ரூபாய் கொடுத்து சாதாரண மக்களும் செல்ல வேண்டும்' என, தகவல் வெளியானது.சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி மரிய மைக்கேல் கூறுகையில்,''ஊட்டி மலை ரயில் தனியாருக்கு வழங்கப்படவில்லை. ஏற்கனவே இருந்ததை போல், சுற்றுலா மேம்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட பயணியர் மலை ரயில், விரைவில் இயக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE