கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.கோவை வேளாண் பல்கலையில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தினமும், 600 மாணவர்கள் அழைக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அவர்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டு வருகிறது.பல்கலை துணைவேந்தர் குமார், இளம் அறிவியல் வேளாண்மையில் முதல் மூன்று இடம்; மற்ற பாடப்பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கைக்கான உத்தரவுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE