மும்பை : இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான, 'சென்செக்ஸ், நிப்டி' ஆகியவை, மீண்டும்
வரலாற்று சாதனையை நேற்று நிகழ்த்தி உள்ளன.

முதலீட்டாளர்
கொரோனா தடுப்பூசி கள் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பது,
அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றால், முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து
உள்ளது. இதனால், சந்தைகள் எழுச்சியை கண்டுள்ளன. நாளின் பிற்பகுதியில், முதலீட்டாளர்கள் மிக அதிக அளவிலான பங்குகளை வாங்கியதும், சந்தைகள் உயர்வில் முடிய காரணமாக அமைந்தது.

அதிக விலை
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 45,426.97 புள்ளிகளும்; தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 13,366.65 புள்ளிகளும் உயர்ந்து, சாதனை படைத்துள்ளன. நேற்றைய வர்த்தகத்தில், 'பார்தி
ஏர்டெல்' நிறுவனம், சென்செக்ஸ் பிரிவில் அதிக விலை உயர்வை சந்தித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE