சேத்தியாத்தோப்பு; கடலுார் மேற்கு மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றிய கிராமங்களில் மழை வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு பா.ஜ., சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கீழ்நத்தம், கொங்கரான்பாளையம், வேலப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் மழை வெள்ளத்தால் பாதித்த மக்களை சந்தித்து பா.ஜ., ஒன்றிய பொதுச் செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் ஆறுதல் கூறி உணவு பொட்டலங்கள் வழங்கினர்.கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் தாமரை மணிகண்டன், மாவட்ட பொதுச் செயலாளர் தியாகு, ஒன்றிய துணைத்தலைவர் சம்மந்தம், இளைஞரணி தலைவர் சங்கர்கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE