விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், உலக மண்வள தின விழா மற்றும் கருத்தரங்கு நடந்தது.விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். 'மண்ணின் உயிர் காப்போம், மண் பல்லுயிர் அமைப்பை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், உதவி வேளாண் இயக்குனர் விஜயகுமார், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், உதவி பேராசிரியர்கள் பொற்கொடி, பாஸ்கர், நடராஜன், பாரதிகுமார் பேசினர்.மண் வளம் முக்கியத்துவம், வேளாண்துறை திட்டங்கள், சொட்டுநீர் பாசனம், மண் பரிசோதனை, உர மேம்பாடு, நீர் மற்றும் நிலவள திட்ட செயல்பாடுகள், நோய் தாக்குதல், கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் தரப்பட்டது. மண்வள அடையாள அட்டை, மண் வள மேம்பாட்டு கையேடு வழங்கினர். மண்வளம் குறித்த கண்காட்சி நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE