நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் தண்ணீரால் சூழப்பட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றினர்.நெல்லிக்குப்பத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. திருக்கண்டேஸ்வரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. தகவலறிந்த கமிஷனர் கிருபாகரன், சிறப்பு அதிகாரி ஜோலார்பேட்டை கமிஷனர் ராமஜெயம், கிருஷ்ணகிரி பொறியாளர் கோபு, துாய்மை அலுவலர் சக்திவேல் ஆகியோர் சென்று பார்வையிட்டு, ஊழியர்கள் மூலம் மின் மோட்டாரை கொண்டு வீடுகளை சூழ்ந்திருந்த தண்ணீரை அகற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE