விருத்தாசலம்; சின்னவடவாடி ஏரி நிரம்பி உபரி நீர் மதகுகள் வழியே வெளியேறுவதால் 20 கிராமங்களின் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி ஏரி பாசனம் மூலம் சின்னவடவாடி, எ.வடக்குப்பம், எருமனுார், வயலுார், செம்பளக்குறிச்சி, நாச்சியார்பேட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.நிவர், புரெவி புயலினால், கடந்து ஒரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்வதால், சின்னவடவாடி ஏரி நிரம்பி, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறுகிறது. இதனால், சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.விழல் மற்றும் நெய்வேலி காட்டாமணிகள் அதிகளவில் மண்டி ஏரி துார்ந்துள்ளதால் அறுவடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. விழல் மற்றும் நெய்வேலி காட்டாமணிகளை அகற்றி, ஏரியை ஆழப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE