கடலுார்: 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் உருவாகியதை தொடர்ந்து கடலுாரில் 15 நாட்கள் இடைவெளிக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க எடுத்து செல்லப்பட்டன.வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல் காரணமாக, கடந்த மாதம் 21ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், விசைப்படகுகளை, மீன்பிடி துறைமுக பகுதி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனர்.நிவர் புயலை தொடர்ந்து 2 ம் தேதி புரெவி புயல் உருவாகியதால் விசைப்படகுகளில் தொடர்ந்து மீன்பிடிக்க செல்வதில் தடை ஏற்பட்டது. புரெவி புயலும் கரையை கடந்து சகஜ நிலை திரும்பியதால் 15 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் நேற்று மீன்பிடிக்க எடுத்து செல்லப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE