கள்ளக்குறிச்சி; பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் ராபி பருவத்தில் காப்பீடு செய்து பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் இந்திராகாந்தி செய்திக்குறிப்பு :தற்போது ராபி பருவத்தில் மரவள்ளி, சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு எதிர்பாராமல் வரும் நஷ்டங்களைத் தவிர்க்க விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.குறிப்பிட்ட நேரத்தில் துவங்க வேண்டிய உழவுப் பணிகள் தொடங்கி வயலில் சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்யும் வரை அனைத்து பணிகள் சுழற்சியும் மாறுபடுகிறது. எதிர்பார்க்கும் மழை பெய்யாமல் போனாலோ அல்லது அதிக அளவு பொழிவு இருந்தாலோ விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் தொடர முடியாமல் போகிறது.இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத இழப்புகளை சரி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பிரதான் மந்திரியின் 'பசல் பீமா யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.எக்டர் ஒன்றுக்கு வெங்காயம் பயிருக்கு பிரீமியம் தொகை 792 ரூபாய். இழப்பீடு தொகை 15, ஆயிரத்து 950 ரூபாயும், மரவள்ளிக்கு பிரீமியம் தொகை 1,335 ரூபாய். இழப்பீடு 26 ஆயிரத்து 700 ரூபாய் ஆகும். வெங்காயத்திற்கு காப்பீடு செய்ய 2021ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும்; மரவள்ளிக்கு மார்ச் 1ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகள் ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களைக் கொண்டு நேரடியாக பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அல்லது வங்கிகள் மூலமாக செலுத்தலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE