மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள இளையாங்கண்ணி கூட்ரோட்டில் கடைக்குள் புகுந்தபெட்ரோல் லாரியால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.அரசம்பட்டைச் சேர்ந்தவர் பழனிமுத்து மகன் பாண்டியன், 29; லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலுாரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் லோடு இறக்கிவிட்டு, அதிகாலை அரசம்பட்டு நோக்கிச் சென்றார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த இளையாங்கண்ணி கூட்ரோட்டு வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள ஹார்டுவேர் கடையில் புகுந்தது. இதில் சிறு காயங்களுடன் டிரைவர் பாண்டியன் தப்பினார்.மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE