ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் அமையவுள்ள அரசு மினி கிளினிக்குகளில் மருந்தாளுனர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
அரசு, தனியார் பார்மசி கல்லுாரிகளில் மருந்தாளுனர் பட்டய படிப்பு படித்தவர் மட்டுமே மெடிக்கல் ஷாப்புகள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றலாம். அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர் பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது. பல ஆயிரம் மருந்தாளுனர்கள் மாற்று தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துார் மருந்தாளுனர் சுப்பையா கூறியதாவது: இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் டிச., 15 க்குள் துவங்கவுள்ளது. அரசு பணிக்காக 25 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இந்த சந்தர்பத்தில் அரசு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE