சிவகாசி : திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்பில் தோரண வாயில் கட்டுவதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அடிக்கல் நாட்டினார்.
10 வது வார்டில் ரூ. 7 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி, சத்யா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 68 லட்சம் மதிப்பில் கட்டடம், 6 வது வார்டில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பணிகளுக்கும் அமைச்சர் தலைமையில் பூமி பூஜை நடந்தது.நகராட்சி கமிஷனர் பாண்டித்தாய், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, உதவி செயற்பொறியாளர் கோபால கிருஷ்ணன், அ.தி.மு.க., நிர்வாகிகள் பொன்சக்திவேல், புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், சுப்பிரமணியன், ஆழ்வார் ராமானுஜம், கருப்பசாமிபாண்டியன், விஜய் ஆனந்த், சையது சுல்தான், லட்சுமி நாராயணன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE