ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகரில் 10 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், சாகும்வரை சிறைதண்டணை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் தாலுகா தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பட்டாசு ஆலை தொழிலாளி தங்கவேல் 51.இவர், 2014ல் பக்கத்து தெருவில் 10 சிறுமிகளை டி.வி.,யில் கார்ட்டூன் படம் காண்பிப்பதாக வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் பெற்றோரிடம் கூறினர். விருதுநகர் மகளிர் போலீசார் தங்கவேலை கைது செய்தனர். இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. தங்கவேலுவிற்கு சாகும் வரை சிறை தண்டனை, ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் அபராதம், பாதிக்கபட்டதில் 5 சிறுமிகளுக்கு தலா ரூ.2 லட்சம் அரசின் சார்பில் நிவாரணம் வழங்க நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE