சாத்துார் : மாவட்டத்தில் கிராமங்களுக்கு இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் பணி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து டவுன் பகுதிக்கு வரவும், வேலைக்கு செல்லவும் பயணிகள் டவுன் பஸ்களை நம்பி உள்ளனர். கிராமங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலாக உள்ளன. பஸ்சின் இருக்கைகள், ஜன்னல்கள், படிக்கட்டுகள் பழுதாகி உள்ளது. பஸ்கள் ஓடும் போது பள்ளங்களில் எகிறி குதிப்பதால் பயணிகள் தடுமாறுகின்றனர்.
பஸ்சின் இருக்கையில் உட்கார்ந்து பயணிப்பதை விட நின்று கொண்டே பயணிக்கவே பயணிகள் விரும்புகின்றனர். பஸ்களில் ெஹட்லைட், முகப்பு கண்ணாடிகளை சுத்தம் செய்யும் வைபர், டிரைவர் இருக்கைகள் உடைந்துள்ளன. போக்குவரத்து பணி மனைகளில் உதிரி பாகங்கள் இல்லாததால் பழுது நீக்க வழியில்லை. பழுதான பஸ்களை ஓரம் கட்ட வேண்டும்.
ஒழுகும் கூரைகள்
கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் 20 ஆண்டுகள் ஓடி தேய்ந்து காலாவதியாகி விட்டன. மழை காலங்களில் பஸ்சின் மேற்கூரை வழியாக மழை நீர் விழுகிறது. பயணிகள் குடை பிடித்து செல்கின்றனர். தரமான பஸ்களை இயக்க வேண்டும்.சங்கரேஸ்வரன், வியாபாரி, சாத்துார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE