திருப்போரூர்; சேறுடன் கலந்த குப்பை கழிவுகளால், படூரில் துர்நாற்றம் ஏற்பட்டு, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்போரூர் ஒன்றியம், படூர் - -கேளம்பாக்கம் சாலை, படூர் பஸ் நிறுத்தம் அருகே, குடியிருப்பு வீடுகள், வணிக கடைகள் உள்ளன.இங்கு குவிந்துள்ள சாலையோர மண்ணில், குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், மழை நீரில் அவை நனைந்து, சேறும் சகதியுமாக மாறுகின்றன.இதிலிருந்து எழும் துர்நாற்றத்தால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, சேறுடன் கலந்த குப்பை கழிவுகளை அகற்றி, குப்பை தொட்டி அமைத்து, முறையாக பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE