திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் சிறப்பு உதவி ஆய்வாளர், சாலை விபத்தில் இறந்தார்.ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 56, இவர், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில், இரண்டு ஆண்டுகளாக, சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, ரோந்து பணிக்காக, திருக்கழுக்குன்றம் அருகே வடக்குபட்டு பைபாஸ் சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, நாய் ஒன்று குறுக்கே வந்ததால், நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்தார்.இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி, நள்ளிரவு, 1:30 மணிக்கு இறந்தார். திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE