கம்பம் ஏகலுாத்து ரோட்டில் சிக்காலியம்மன் குளம், பள்ளன்குளம், ஆலமரத்து குளம், கம்பமெட்டுரோட்டில் புதுக்குளம் உள்ளிட்ட 21 சிறு மற்றும் பெரிய கண்மாய்கள் மலையடிவாரங்களில் இருந்தன. இவற்றில் தேங்கும் நீர் மானாவாரி நிலங்களில் விவசாயம், கால்நடைகளுக்கு கோடைகாலங்களில் தாகம் தீர்க்க பயன்பட்டது. ஆனால் இக்கண்மாய்கள் சரிவர பராமரிக்கப்படாததாலும், கண்டுகொள்ளப்படாததாலும் அவை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
கண்மாய் இருந்த இடங்கள் எங்கே என்று தேட வேண்டியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைக்குன்றுகளிலிருந்து வெளியேறும் மழைநீரை இங்கு சேமிக்க முடியவில்லை. ஏகலுாத்து ரோட்டில் இருந்த பல குளங்கள் காணாமல் போய்விட்டது.ஆலமரத்து குளத்தை விவசாயிகள் துார்வாரினர். ஆனால் அதற்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய்களை மீட்க முடியவில்லை.
இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள 21 கண்மாய்களை கண்டுபிடித்து அதனை அகற்றி மீட்டு அவற்றை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதன்மூலம் அவற்றில் மழைநீரை சேமித்து பயன்படுத்தலாம் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE