காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயில் அடித்து வரப்பட்ட நாய் குட்டியை, கழிவுநீர் என்றும் பார்க்காமல், கால்வாயில் இறங்கி, இளைஞர்கள் உயிருடன் மீட்டனர்.காஞ்சிபுரம், மஞ்சள் நீர் கால்வாயில், மழைநீரில் அடித்து வரப்பட்ட நாய் குட்டி ஒன்று, நேற்று காலை, திருக்காலிமேடு - நேதாஜி நகர் இடையே, சிறுபாலத்தின் கீழே உள்ள சகதியில் சிக்கி, கத்தியபடியே கிடந்தது.அவ்வழியே, இருசக்கர வாகனத்தில் வந்த, சின்ன அய்யங்குளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜாவ், அண்ணாமலை ஆகியோர், நாய் குட்டியின் சத்தத்தை பார்த்து பரிதாபப்பட்டு, அதை காப்பாற்ற முயன்றனர்.ஜாவ், சிறுபாலத்தின் மீது நின்றுகொண்டு, அண்ணாமலையின் கையை பிடித்துக்கொள்ள, அண்ணாமலை, கால்வாயில் இறங்கி, கழிவு நீரில் தத்தளித்தபடி இருந்த நாய் குட்டியை மீட்டு, சாலையில் விட்டனர்.மனிதாபிமானத்துடன், நாய் குட்டியை காப்பாற்றிய இருவரையும், அங்கிருந்தோர் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE