காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, மாகரல் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கிஷோர். இந்த காவல் நிலையம், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் ஆய்வாளர் கட்டுப்பாட்டில் உள்ளது.ஐந்து மாதங்களுக்கு முன், விச்சந்தாங்கல் பகுதியில், இரு குடும்பத்திற்குள் ஏற்பட்ட சண்டையில், ஒரு தரப்பைச் சேர்ந்த இருவரை, கிஷோர் கடுமையாக தாக்கினார். அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, புகார் அளிக்க வருவோரிடம், கனிவாக பேசுவதில்லை என, பல புகார்கள் எழுந்தன.இதையடுத்து, விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா உத்தரவின்படி, கிஷோர் நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE