தேனி : மாவட்டத்தில் ஒன்பது மாதங்களுக்கு பின் நேற்று கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் கல்லுாரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.
கொரோனா பரவலால் மார்ச் 23 ல் கல்லுாரிகள் மூடப்பட்டன. 9 மாதங்கள் வீட்டில் முடங்கி ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்ற நிலையில் நோய் தாக்கம் குறைந்ததால் அரசு உத்தரவுப்படி நேற்று முதல் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் வகுப்பிற்கு வர அனுமதிக்கப்பட்டனர்.
தேனியில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் ஆர்வமாக கல்லுாரிக்கு வந்தனர். இவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து, சானிடைசரால் கை சுத்தம் செய்து, முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையிலும், செய்முறை பயிற்சியிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
தேனி கம்மவார் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் கூறுகையில், '' பல்கலை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு தேர்வு பாடகுறிப்புகள். செய்முறை பயிற்சிக்கான ஆலோசனை வழங்கப்பட்டது,''என்றார்.
தேனி நாடார் சரஸ்வதி பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சித்ரா கூறுகையில் '' பல்கலை தேர்வு டிச. 14 ல் துவங்குவதால் செய்முறை தேர்வுக்கான சந்தேகங்களை தீர்க்க குறைவாக எண்ணிக்கையில் மாணவிகள் வந்தனர்,என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE