தேனி : கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.29.50 லட்சம் மூலதன மானிய தொகையை துணை முதல்வர் பன்னீர் செல்வம் வழங்கினார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையில் ஊரக புத்தாக்க திட்டத்தில் உற்பத்தியாளர், தொழில் குழுக்கள், கூட்டமைப்பிற்கு மூலதன மானியம் வழங்கும் விழா, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். பெரியகுளம், உத்தமபாளையம் ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்கள் மேம்படுத்த தனிநபர் கடனாகவும், கூட்டமைப்பு மூலம் அதிகபட்சம் ரூ.50,000 வீதம் 518 சுய உதவி குழுவினருக்கு ரூ.1.20 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தொழில் மூல தன நிதி ஆகியவற்றிற்கு என மொத்தம் ரூ.29.50 லட்சம் மானியத்தை துணை முதல்வர் வழங்கினார்.இதில் ஜக்கையன் எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. ரமேஷ், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் ஆனந்தி, வேளாண் இணை இயக்குனர் அழகு நாகேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE