ஆண்டிபட்டி : கடமலைக்குண்டு தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகன் 42. மின்வாரிய தற்காலிக ஊழியராக இருந்தார்.
டிச. 4ல் மின்கம்பத்தில் பழுதை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். அவரது இறுதிச்சடங்கில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கல் வீச்சில் தேவராஜ் நகரைசேர்ந்த மலைச்சாமி 39, ஈஸ்வரன் 35, கருப்பையா 40, ஆகியோர் காயமடைந்து தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதில் கடமலைக்குண்டு போலீசார் பாலுாத்து கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி, செல்லப்பாண்டி, கருப்பையா, முத்துக்குமார், அபினேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE