அஸ்தினாபுரம்; அஸ்தினாபுரம், திருமலை நகரில் வெள்ள பாதிப்புகளை, அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.செம்பாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி, திருமலை நகர் வழியாக, நன்மங்கலம் ஏரியில் கலக்கிறது. இந்த உபரிநீர் கால்வாய், ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுருங்கிவிட்டது.இதனால், ஒவ்வொரு மழையின்போது, கால்வாயில் மழைநீர் நிரம்பி, அருகேயுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துவிடும். இந்த மழைக்கும், திருமலை நகர் பகுதியை, வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில், அப்பகுதியை, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள், நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது, ஆக்கிரமிப்பு குறித்து, மக்கள் புகார் அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE