பம்மல்: பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட, மூங்கில் ஏரி பகுதியில், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால், அப்பகுதி மக்கள், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட, மூங்கில் ஏரி பகுதியில், ஒவ்வொரு மழையின்போதும், தெருக்களில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் தேங்கும். வடிவதற்கு பல நாட்கள் நீடிக்கும். நாளடைவில் இதில் கழிவுநீரும் கலந்து, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளில் புகுந்து விடுகின்றன. பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வாக, மழைநீர் தேங்கக்கூடிய சாலைகள் மற்றும் கால்வாய்களின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த மழைக்கும், திருவள்ளுவர் ஒன்றாவது குறுக்கு தெரு உள்ளிட்ட தெருக்களில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நகராட்சி நிர்வாகமும் கண்டுக்கொள்ளாமல் உள்ளது.தொற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் முன், இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE