திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கல்லுாரிகள் மீண்டும் திறக்கப்பட்ட போதும், குறைவான மாணவர்களே வந்தனர்.
கொரோனாவால் கடந்த மார்ச் முதல் கல்லுாரிகள் மூடப்பட்டன.ஒன்பது மாதங்களுக்கு பின் முதுநிலை படிப்பில் இறுதியாண்டு, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மட்டும் டிச.2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின.நேற்று (டிச.7) முதல் அனைத்து வகை கல்லுாரிகளையும் திறக்க அரசு அனுமதித்தது.இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன. கொரோனா அச்சத்தில் குறைவான மாணவர்களே வந்தனர்.சில கல்லுாரிகளில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகள் மட்டும் நடந்தன.இதர மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE