திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி நிதி வழங்கி, கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார்.
கலெக்டர் தெரிவித்தது: முன்னாள் படை வீரர்களின் சேவையை பாராட்டும் வகையில் டிச.7 ம் தேதி கொடிநாள் விழா அனுசரிக்கப்படுகிறது. கொடிநாள் வசூல் போரில் உயிர்நீத்த படைவீரரின் குடும்பம், ஊனமுற்ற மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும். கடந்தாண்டு ரூ.57.86 லட்சம் வசூலானது.இதன் மூலமாக் 2,404 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடிக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, என தெரிவித்தார். முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் சுகுணா, முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் பெருமாள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE