-மத்திய அரசால் வழங்கப்படும், கல்வி உதவித்தொகையில், சிறப்பு கவனம் செலுத்தி, முறைகேடுகளை தவிர்க்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பயிலும், சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மூன்று பிரிவுகளில், மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அதன்படி, 2020 - -21ம் ஆண்டுக்கான உதவித்தொகைகளுக்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக, 'ஆன்லைன்' வாயிலாக, பெறப்படும் விண்ணப்பங்களில், அதிக கவனம் செலுத்தும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, மாநில சிறுபான்மையின ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசால், வரும் ஆண்டில், 1.32 லட்சம் மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புயல் மழையால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.'ஆன்லைன்' வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்களில், சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், 'கிசான்' திட்டத்தில் நடந்தது போல், கல்வி உதவித்தொகையில், முறைகேடு நடக்காதபடி, கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.குறிப்பாக, தனியார் 'இன்டர்நெட்' மையங்களில் விண்ணப்பிப்போரிடம், சான்றிதழ் நகலை பெற வேண்டும் என, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்
.- நமது நிருபர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE