சென்னை - கோயம்பேடு மார்க்கெட், இன்று வழக்கம்போல இயங்கும் என, வியாபாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.மத்திய அரசு கொண்டுவந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடமாநில விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய, முழு அடைப்பு போராட்டத்திற்கு, இன்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.இதில், விவசாய சங்கங்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் எனவும், அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இன்று கோயம்பேடு மார்க்கெட் இயங்கும் என, வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் வழக்கம்போல வந்து, காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி செல்லலாம் எனவும், வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE