சென்னை = கார்த்திகை நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள, சிவாலயங்களில், 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது.சிவபெருமான் அபிஷேகப் பிரியர். கார்த்திகை மாதம், சோமவாரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் ஒவ்வோர் ஆண்டும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. இதில், முதல் நான்கு வாரங்கள், 108 வலம்புரி சங்குகளாலும், கடைசி வாரம், 1,008 வலம்புரி சங்குகளாலும் அபிஷேகம் செய்யப்படுகிறது.அதன்படி, நான்காவது சோமவாரமான நேற்று, பெசன்ட்நகர், ரத்னகிரீஸ்வரர்; மயிலாப்பூர், கபாலீஸ்வரர்; மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில், 108 சங்குகளால் அபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதத்தின், கடைசி சோமவாரமான, 14ம் தேதி, பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், 1,008 சங்காபிஷேகம் நடக்க உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE