திருவான்மியூர் - திருவான்மியூர் கடலில், அலை சறுக்கு பயிற்சி செய்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தை, அலையில் சிக்கி பலியானார்.பெசன்ட் நகர், வண்ணான் துறையைச் சேர்ந்தவர் பாலாஜி, 55. இவரது, மகள் ரேவதி, 11. இவர், அலை சறுக்கு விளையாட்டு போட்டியில் பங்கேற்று, பல பரிசுகள் பெற்று உள்ளார்.தொடர்ந்து, கடல் அலையில் பயிற்சி எடுத்து வந்தார். நேற்று காலை, திருவான்மியூர் கடலில், அலை சறுக்கு பயிற்சி எடுத்தார். கரையில், பாலாஜி நின்று கொண்டிருந்தார்.திடீரென, நிலைதடுமாறிய ரேவதி, பெரிய அலையில் சிக்கினார். உடனே, மகளை காப்பாற்ற பாலாஜி கடலில் குதித்தார். இருவரும், அலையில் சிக்கி கரை சேர முடியாமல் திணறினர்.ஒரு கட்டத்தில், ரேவதி நீச்சல் அடித்து கரைக்கு வந்து சேர்ந்தார். பாலாஜி, அலையில் சிக்கி பலியானார். இது குறித்து, திருவான்மியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE