மதுரை : மதுரையில் கொரோனா விடுமுறைக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.
கல்லுாரிகளில் வகுப்பறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட உதவிபெறும் கல்லுாரிகளில் 67 சதவீதம் மாணவர்களும், 21 அரசு கல்லுாரிகளில் 70 சதவீத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை புரிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE