பவானிசாகர்: பருவமழையால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 1,258 கன அடியாக இருந்த நீர்வரத்து, 5,139 கனஅடியாக நேற்று மாலை அதிகரித்தது. மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம், 94.50 அடி, நீர் இருப்பு, 24.6 டி.எம்.சி.,யாக இருந்தது. கீழ்பவானி வாய்க்காலில், 1,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement