ஈரோடு: அரச்சலூரில் நேற்று முன்தினம், அதிகபட்ச மழை பதிவானது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னத்தால், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக அரச்சலூரில், 49 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): நம்பியூர், 35, ஈரோடு, 10, பெருந்துறை, 14, கோபி, 22.2, தாளவாடி, 1.4, சத்தி, 11, பவானிசாகர், 7.2, பவானி, 14.2, கொடுமுடி, 10.4, சென்னிமலை, 27, மொடக்குறிச்சி, 31, சிவகிரி, 8.3, கவுந்தப்பாடி, 20, எலந்தகுட்டை மேடு, 26.4, அம்மாபேட்டை, 1.8, கொடிவேரி, 19, குண்டேரிபள்ளம், 20, வரட்டுபள்ளத்தில், 13.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE