ஈரோடு: ஈரோட்டில், ஓடும் பஸ்சில், பிக்பாக்கெட் அடித்தவர் சிக்கினார். ஈரோடு, ஓடைமேடு, பழையபாளையம், இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 55, கூலி தொழிலாளி. மகனுடன் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, டவுன் பஸ்சில் சென்றார். மாநகராட்சி அலுவலகம் எதிரே, வேகத்தடையில் பஸ் மெதுவாக சென்றபோது, அவர் அருகில் நின்றிருந்த ஆசாமி, சட்டை பாக்கெட்டில் இருந்த, 200 ரூபாயை எடுத்துக்கொண்டு இறங்கி ஓடினார். மகன், சக பயணிகள் உதவியுடன் ஆசாமியை பிடித்து, டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், நாமக்கல், ஏ.எஸ்.பேட்டை, கொழந்தான் தெருவை சேர்ந்த செண்பகராஜ், 42, என்பது தெரிந்தது. போலீசார் கைது செய்து, கிளை சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE