சேலம்: சேலம், அரசு மருத்துவமனை கொரோனா வார்டில், சிகிச்சை பெறுவோரில், ஒரு பெண், ஆண்கள் நான்கு பேர் குணமாகி, நேற்று வீடு சென்றனர். புதிதாக, ஒரேநாளில் சேலம் மாவட்டத்தில், 72 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில், 25, மேட்டூரில் ஏழு பேர், நங்கவள்ளி, ஓமலூரில் தலா நான்கு பேர், வாழப்பாடி, கொளத்தூரில் தலா மூவர், மேச்சேரி, தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம், தலைவாசலில் தலா இருவர். காடையாம்பட்டி, சங்ககிரி, வீரபாண்டி, ஆத்தூர், பி.என்.பட்டி, பெ.நா.பாளையத்தில் தலா ஒருவர் வீதம் மாவட்டத்தில், 60 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, ஈரோட்டை சேர்ந்த ஆறு பேர், கிருஷ்ணகிரியை சேர்ந்த மூவர், நாமக்கல்லை சேர்ந்த இருவர், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் என, சேலத்தில், பாதிக்கப்பட்டவர்கள், 72 பேர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE