சேலம்: சேலத்தில், பிரதமரின் கிசான் திட்டத்தில், புரோக்கர்களுடன் கைகோர்த்து, மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமரின் கிசான் திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், ஆறு கோடிக்கு ரூபாய்க்கு மோசடி நடந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து புரோக்கர்கள், விவசாயிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை எட்டு பேர் சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவ.,25ல், வேளாண்மை துறை துணை இயக்குனர் பாலையா உட்பட அதிகாரிகளிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி ஆவணங்களை பெற்றனர். இதில் இடம் பெற்றிருந்த விவசாயிகளிடம், ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில், புரோக்கர்களுடன் அதிகாரிகள் கைகோர்த்து, மோசடியை அரங்கேற்றியது தெரிய வந்தது. மோசடி அதிகாரிகளின் பட்டியல் தயாரித்து, அவர்களை ரகசியமாக கண்காணிப்பதோடு, புரோக்கர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE