சேலம்: சேலம் சின்னேரி வயல்காடு பகுதியில், மாநகராட்சியை கண்டித்து, பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் சின்னேரி வயல்காடு பகுதியில், உள்ள இரண்டு தெருக்களில், தார்ச்சாலை அமைப்பதற்காக, பல மாதங்களுக்கு முன்பு, ஜல்லி கலவை கொட்டப்பட்டது. அதன் பின் தார்ச்சாலை அமைக்க, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து, நேற்று சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கையில் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில், அப்பகுதி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாநகராட்சிக்கு நிதி திரட்டி தர, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE