சேலம்: வேளாண் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி, சூரமங்கலம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட, 19 பேரை போலீசார் கைது செய்தனர். புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி, டில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் தலைமையில், சூரமங்கலம் தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். போராட்டத்துக்கு, போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 19 பேரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். மாலையில் விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE